பறை முழங்கி.. மணக்க மணக்க பீப் பிரியாணி சமைத்து உண்டு.. பொதுமக்களுக்கு வழங்கி-தபெதிக தூள் போராட்டம்
மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதை கண்டித்து, புதுவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாட்டிறைச்சி பிரியாணி சமைத்து உண்ணும் போராட்டத்தை நடத்தினார்கள்.
புதுச்சேரி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்றாலும் மதுரை, சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சமூக இயக்கத்தினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மாட்டிறைச்சியை சமைத்து உண்ணும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

மணக்க மணக்க பீப் பிரியாணி
இதற்காக புதுச்சேரி சட்டசபையில் பின்புறம் கூடிய தபெதிகவினர், பெரிய பாத்திரம் வைத்து 25 கிலோ பீப் பிரியாணியை மணக்க மணக்க சமைத்தனர். பின்னர், போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினார்கள்.

பொதுமக்களுக்கு வழங்கி..
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் காண வந்திருந்த பொதுமக்களுக்கு பீப் பிரியாணியை தபெதிகவினர் வழங்கினார்கள். தமிழக பண்பாட்டு கலாச்சாரத்தின் மீதான மத்திய அரசின் தாக்குதலை கடுமையாக எதிர்த்து போராடுவோம் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மோடியின் வஞ்சக சூழ்ச்சி
இந்தப் போராட்டம் குறித்து தபெதிக துணை தலைவர் இளங்கோவன், பாஜக திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை இந்தியாவில் நிறைவேற்றி வருகிறது. வஞ்சமாக இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ள பாஜகவை கடுமையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications