ஸ்டெர்லைட்.. பிரதமரின் மௌனம் துரோகத்திற்கு இணையானது: பாலியல் சிறுபான்மையினர் சாடல்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோவையில் பாலியல் சிறுபான்மையினர் கூட்டம் நடைபெற்றது.
Recommended Video

கோவை: மௌனம் துரோகத்திற்கு இணையானது என்பதால் பிரதமர் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்று பாலியல் சிறுபான்மையினர் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என பாலியல் சிறுபான்மையினர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.

இதற்காக கோவை சாய்பாபா காலனி பகுதியில் பாலியல் சிறுபான்மையினர் ஒன்று கூடினர்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும் மீண்டும் ஆலையை திறக்காதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும், துப்பாக்கி சுடுவதற்கான உத்தரவை யார் வழங்கினார்கள் என்று பகிரங்கமாக வெளியிட வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களாக இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும், காவிரி, சுற்றுச்சூழலை பாதிக்கும் எரிவாயு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தமிழகம் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் மௌனமாக இருப்பதாகவும், மௌனம் துரோகத்திற்கு இணையானது என்பதால் பிரதமர் இதில் மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற பாலியல் சிறுபான்மையினர் வலியுறுத்தினர்.
தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் பிரதமர் மோடி மவுனத்தை கலைக்க வேண்டும்: பாலியல் சிறுபான்மையினர் மௌனம் துரோகத்திற்கு இணையானது என்பதால் பிரதமர் தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களில் மௌனத்தை கலைத்து பேச வேண்டும் என்று பாலியல் சிறுபான்மையினர் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications