அம்மா மருந்தகம் திட்டம் பெயரில் ரூ.25 லட்சம் மோசடி - டிராவல்ஸ் அதிபர் கைது
கோவை: அம்மா மருந்தகம் திட்டத்துக்கு வாகனங்கள் தேவை எனக் கூறி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட வாடகை கார் உரிமையாளர்கள் சுமார் 250 பேரிடம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்ததாக டிராவல்ஸ் நிறுவன அதிபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவை தடாகம் ரோடு வடமதுரை பகுதியைச் சேர்ந்த அருண்பிரசாத்(28) டிராவல்ஸ் நடத்திவருகிறார். அவர், தமிழக அரசு அறிவித்துள்ள அம்மா மருந்தகம் திட்டத்துக்கு கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் வாடகை கார் தேவை என விளம்பரம் கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து சக வாடகை கார் ஓட்டுநர்கள், அருண்பிரசாத்திடம் ஒப்பந்தம் பெறுவதற்காக ஒரு வாகனத்துக்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 13 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர்.
அவர்களிடம் ரூ.20 மதிப்புள்ள அரசு முத்திரையுடன் கூடிய பத்திரத்தை கொடுத்த அருண்பிரசாத், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை மண்டல சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி வருமாறும், அங்கு ஒப்பந்தமும், அரசு ஆணையும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பி, கோவை மண்டல சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு வாடகை கார் உரிமையாளர்கள் வந்தபோது, அப்படி ஒரு திட்டமே இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அருண் பிரசாத்தை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தோம்' என்றனர்.
மூன்று மாவட்டங்களிலும் 250 வாடகை கார் ஓட்டுநர்களிடம் ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.25 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு அருண்பிரசாத் ஏமாற்றிவிட்டதாக வாடகை கார் உரிமையாளர்கள் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவையை சேர்ந்த கார் உரிமையாளர் ஹரிஹரன் கூறியதாவது, வாடகை கார்களுக்கு 4 வருட ஒப்பந்தம், ஒரு மாதத்தில் 26 நாட்களுக்கு காருக்கு வேலை இருக்கும். வாடகைக்கு காரின் தன்மைக்கு ஏற்ப ரூ. 23 ஆயிரத்தில் இருந்து ரூ.45 ஆயிரம் வரை வாடகை கிடைக்கும்.
அதனுடன், கார் ஓட்டுநருக்கு ரூ. 4,500 சம்பளம், தினந்தோறும் 200 ரூபாய் பேட்டா மற்றும் பேருந்து செலவுக்கு ரூ. 50 எனவும் வழங்கப்படும் என தெரிவித்து அருண்பிரசாத் அனைவரையும் ஏமாற்றிவிட்டார் என்றார்.
அருண்பிரசாத் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications