தனது எல்ஐசி காப்பீட்டு தொகையை கேரள நிவாரணத்துக்குக் கொடுத்த திருச்சி பொறியியல் மாணவி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருச்சி சாரநாதன் கல்லூரி மாணவி தனது எல்ஐசி காப்பீட்டுத் தொகையை கொடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திருச்சி சாரநாதன் கல்லூரி மாணவி தனது எல்ஐசி காப்பீட்டுத் தொகையை கொடுத்துள்ளார்.
கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது. 5,645 முகாம்களில் 12.47 லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

32 பேரை காணவில்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நாடுமுழுவதும் இருந்து உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிஏ படிக்கும் மாணவி ஸ்ருதி எல்ஐசி பாலிசி கட்டிய தொகையான 80, 074 ரூபாய் பணத்தை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications