டி.டி.வி தினகரன் எப்போதும் தனி மரம் தான் : அமைச்சர் ஓ.எஸ். மணியன்
டி.டி.வி தினகரன் எப்போதும் தனி மரம் தான் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டிணம் : டி.டி.வி தினகரன் பக்கம் அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ் மணியன், டி.டி.வி தினகரன் அதிமுகவில் இருந்து உறுப்பினர்களை இழுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார். ஆனால், அது பலிக்காது.
அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ யாரும் அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். டிடிவி இப்போது மட்டுமல்ல எப்போதும் தனி மரம் தான்.
அரசு திட்டங்களை எதிர்க்க சிலர் மக்களைத் தொடர்ச்சியாகத் தூண்டிவிட்டு வருகிறார்கள். அவர்கள் யார் என்பதை விரைவில் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications