பதவியை தக்க வைக்க அமைச்சர்கள் மாற்றி பேசுகின்றனர்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

பதவியை தக்க வைக்க அமைச்சர்கள் மாற்றி பேசுகின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பதவியை தக்க வைக்க அமைச்சர்கள் மாற்றி பேசுகின்றனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர்கள் அடிக்கடி மாற்றி பேசுவது மக்களுக்கு தெரியும் என்றார்.

TTV Dinakaran accusing ministers for their talks

அமைச்சர்கள் மாற்றி, மாற்றி பேசி வருவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பொதுச்செயலாளர் ஒப்புதல் இல்லாமல் அதிமுக பொதுக்குழுவை கூட்ட அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை என டிடிவி திகனரன் கூறியுள்ளார்.

அதிமுக சட்டவிதிப்படி பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரையும் நீக்கியிருப்பார்களோ என தோன்றுகிறது என தினகரன் தெரிவித்தார்.

அமைச்சர்களின் தரம் நாளுக்கு நாள் மக்களிடையே குறைந்து வருகிறது என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். தம்பித்துரை உள்ளிட்டோர் தான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். தம்பிதுரை டெல்லிக்கே செல்லாமல் போயஸ் கார்டனில் தான் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா படம் இடம்பெயராமல் போனதற்கு நான் காரணமில்லை என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ மட்டும் அல்ல இன்டர்போல் விசாரிக்கவும் நாங்கள் தயார் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+