செல்லாது..செல்லாது...ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் செல்லாது- சொல்வது தினகரன் தரப்பு
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து, தற்போது பணியிலுள்ள நீதிபதியின் தலைமையில்தான் விசாரணை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ பதவி பறிப்புக்கு உள்ளாகியுள்ள வெற்றிவேல் தெரிவித்தார்.
சென்னை ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த வெற்றிவேல் கூறுகையில், தற்போது பணியில் உள்ள மூத்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால் அரசு 'பம்மாத்து' அறிவிப்புகளை வெளியிடுகிறது.

அரசு அமைத்த விசாாரணை கமிஷனுக்கு தேவைப்படும் ஒத்துழைப்புகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என்றார்.
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறுகையில், இது ஒரு கபட நாடகம்தான் என்று நினைக்கிறோம். இருப்பினும், விசாரணை கமிஷன் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்ட நிலையில் அரசு, விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது வரவேற்புக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications