நான் சுயேட்சை வேட்பாளர் கிடையாது அதிமுககாரன்தான்.. டிடிவி தினகரன் பளார்! பளார்!
ஆர். கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதை அடுத்து டிடிவி தினகரன் மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

மதுரை: ஆர். கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிப்பதை அடுத்து டிடிவி தினகரன் மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''நான் சுயேட்சை வேட்பாளர் கிடையாது. அதிமுககட்சியை சேர்ந்தவன்தான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆர்.கே நகரில் தற்போது இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மூன்று சுற்று முடிவுகள் வரை தினகரனே முன்னிலை வகிக்கிறார்.

தற்போது இதுகுறித்து தினகரன் மதுரையில் பத்திரிகையாளரை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ''சுயேட்சையாக நீங்கள் பெற்ற வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த தினகரன் ''நான் சுயேட்சை வேட்பாளர் கிடையாது. நான் எப்போதும் அதிமுககாரன் தான்'' என்று சந்தோசத்துடன் குறிப்பிட்டார்.
அவர் இப்படி கூறியதும் அருகில் இருந்த அவரது தொண்டர்கள் உடனடியாக ''அதிமுக கட்சி ஆர்.கே நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் வாழ்க'' என்று கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications