துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி - தினகரன் ஆவேசம்: வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தின் மொத்த உருவம் என தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி: துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி என தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்துள்ளார்.
தமிழக சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை நேற்று தகுதி நீக்கம் செய்தார். இதனையடுத்து, ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ''எப்படியாவது பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பதைபதைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
அவர் துரோகத்தின் மொத்த உருவம். அவரது கையில் போலீஸ் துறை உள்ளது என்பதற்காக கான்ட்ராக்டர் சுப்பிரமணியன் தர்கொலை வழக்கில் பழனியப்பன் எம்.எல்.ஏவை தொடர்புபடுத்தி அச்சுறுத்துகிறார்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது யாரோ ஒருவரிடம் புகார் எழுதி வாங்கி வந்து வழக்குப் பதிவு செய்கிறார்கள்.

இதற்கெல்லாம் பயப்டுகிறவர்களா நாங்கள்? அனைத்து கட்சியின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கட்டாயம் வீட்டுக்கு அனுப்புவோம்'' என கூறினர்.












Click it and Unblock the Notifications