தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரை வழிமறித்த மக்கள்... போலீஸ் துணையுடன் தப்பி ஓட்டம்
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரை மக்கள் வழிமறித்தனர். அப்போது போலீஸ் துணையுடன் அவர் தப்பி ஓடினார்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியரை மக்கள் வழிமறுத்ததால் போலீஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்சியர் தப்பி ஓடினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
உடல்களை பார்வையிட தூத்துக்குடி ஆட்சியர் அங்கு வருவதாக கூறப்பட்டது. இதனிடையே ஆட்சியரும் எஸ்பியும் பதவி விலக வேண்டும் என்று கோரி மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு ஆட்சியர் வருகை தந்தனர். அப்போது வழியிலேயே அவரை பொதுமக்கள் மறித்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸ் துணையுடன் ஆட்சியர் தப்பி ஓடிவிட்டார்.
ஆட்சியரை வழிமறித்த நேரத்தில் கமல் வந்தார். அவர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.