தூத்துக்குடியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. வெள்ளத்தில் சிக்கிய மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு 10.30 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில வெள்ள நீர் புகுந்தது.

வெள்ள நீர் பெருககெடுதது ஓடுவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியவில்லை. எட்டயபுரம் ரோட்டிலுள்ள ஆதிபராசக்தி நகர், முத்தம்மாள் காலனி, ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு சென்று அங்கு தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஆதிபராசக்தி நகரில் வெள்ள நீர் தங்கள் பகுதியில் நுழைந்து விட கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டததில் குதித்தனர். மேலும் ஏற்கனவே இருக்கும் வெள்ள நீரை விரைந்து வெளியேற்றக் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
ஆதிபராசக்தி நகரில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரரகள் கயிறு மூலம் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர். மேலும் ரயில் நிலையம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு சித்த மருத்துவமனை, பழைய மாநகராட்சி அலுவலகம் உள்பட பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மரங்களும், மின் கம்பங்களும் திடீரென சாய்ந்ததால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களும், கார்களும சேதம் அடைந்தன. வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர் சண்முகநாதன், கலெக்டர் ரவிக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications