மருத்துவமனையில் இருந்து கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் மருத்துவமனையில் இருநது தப்பி ஓடியதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்போரை அருகே கீழக்கல்லாம பாறையை சேர்ந்தவர் காசி மனைவி பாக்கியலெட்சுமி. அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ராஜகுமார்.
இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து வீடுகள் இருக்கின்றன. இந்த இடம் தொடர்பாக பாக்கியலெட்சுமிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜ்குமார் பாக்கியலெட்சுமியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குரும்பூர் போலீசில் பாக்கியலெட்சுமி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை ஸ்ரீவைகுணடம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தலைமை காவலர் சுப்பையா, ராமசாமி ஆகியோர் ஆஜர்படுத்தினர்.
அவரை ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து வந்தனர்.
மருத்துவமனை வெளிப்புற நோயாளிகள் பிரிவில் அவரை அமர வைத்து விட்டு டாக்டரை பார்க்க போலீசார் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது அங்கே அவர் இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள் மருத்துவமனை வாளகம் முழுவதும் தேடி பார்த்தனர்.
எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து வாகனங்களிலும் போலீசார் அதிகாலை வரை சோதனை நடத்தினர். ஆனால் அவர் சிக்கவில்லை. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications