சென்னையில் இலங்கை துணை தூதரகம் முற்றுகை.. தமிழக வாழ்வுரிமை கட்சிப் போராட்டத்தால் பரபரப்பு
தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிங்கள கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது இலங்கை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

சிங்கள கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது பிரிட்ஜோ என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் இலங்கை துணைத் தூதரகம் ,இன்று முற்றுகையிடப்பட்டது.
அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இலங்கை அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.











Click it and Unblock the Notifications