போலீஸ் கையை பிடித்து வெறியுடன் கடித்து வைத்த தவெக தொண்டர் ஜெமினி.. தருமபுரியில் கைது!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மதுபான பாரை அகற்றக்கோரி தவெக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, தலைமைக் காவலரின் கையை கடித்த தவெக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் கையைப் பிடித்து கடித்த தவெக தொண்டர் ஜெமினி கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் சொகுசு வசதிகளுடன் கூடிய தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான பார் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், பள்ளி செல்லும் மாணவர்களுகு இடையூறாக இருப்பதாகவும் கூறி அதனை அகற்றக்கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கிய தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவா பேசுகையில், ஆட்சிக்கு வரும் முன்பு படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என கூறிய திமுக, அதற்கு மாறாக அரசு மதுபான கடைகளை அதிகரித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென தனியார் பாரை தவெகவினர் முற்றுகையிட்டனர். தடுப்பை மீறி மதுபானக் கூடத்துக்குள் நுழைந்து தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதில் போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இளைஞர் திடீரென போலீஸ் ஒருவரின் கையைப் பிடித்து கடித்தார். அவர் ஒன்றிரண்டு முறை கடிக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போலீசார் - தவெக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையான போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சமாதானம் அடையாததால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.
தவெக தொண்டர், தலைமை காவலர் அருள் என்பவரின் கையை கடித்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கட்சிக்காரங்க என்னோட உறவுன்னு சொல்றீங்களே விஜய், அப்புறம் ஏன் கரூர்ல இருந்து காப்பாற்றாம ஓடுனீங்க? -
“ரெய்டு வந்தா டெல்லிக்கு வெள்ளை குடை பிடிப்பது யார்னு உங்களுக்கே நல்லா தெரியும்” - விஜய் பேச்சு! -
தேர்தலில் போட்டியிட்டு தோற்க நாங்க முட்டாளா - தவெக கூட்டணியில் இருந்த ஒரே கட்சியும் எஸ்கேப் -
அரசியல் வரலாறே தெரியாமல் பேசி.. அம்பலப்பட்ட விஜய்! திமுக இருமுறை தொடர்ந்து ஜெயித்தது அறியாத பரிதாபம் -
கடைசியில விஜய்க்கு இருந்த ஒரு வாய்ப்பும் போச்சா.. அடித்து ஆடிய ஸ்டாலின்! ஓடி வந்த காங்கிரஸ்! -
நீங்க ரூல்ஸ போடுங்க.. நாங்க பழி மேல பழி போட்டு தடுக்குறோம்! திமுக - அதிமுக மீது விஜய் நேரடி அட்டாக்! -
நடிகையுடன் கனெக்சன்.. போட்டுடைத்த சங்கீதா! பரபர பஞ்சாயத்துக்கிடையே தஞ்சை வரும் விஜய்! பேசுவாரா? -
கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டை டெல்லி ஜெயிக்காது! CSK-ஐ குறிப்பிட்டுப் பேசிய விஜய்! அதிர்ந்த அரங்கம் -
தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? திமுகவிடம் வேல்முருகன் வைத்த டிமாண்ட்! -
என் பாப்பாவைவிட எனக்கு விஜய்தான் பிடிக்கும்.. கைக்குழந்தையுடன் தஞ்சை வந்த பெண் சிலாகிப்பு! -
எலே பேதில போவ.. அச்சு அசலா சேனல்களின் டூப்ளிகேட் அக்கவுண்ட்.. தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் விபரீதம்! -
“அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும்”.. பச்சை துண்டுடன் வந்து பேசிய விஜய்!












Click it and Unblock the Notifications