கழிவறை தொட்டிக்குள் விழுந்த 2 சிறுவர்கள் பரிதாப பலி.. சேலம் அருகே சோகம்
சேலம்: சேலம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூர் பள்ளப்பட்டியில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கழிவு நீ்ர் தொட்டி தோண்டப்பட்டிருந்தது. அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இந்நிலையில் அந்த பகுதியில் சிறவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு, சஞ்சய் என்ற சிறுவர்களின் பந்து குழியில் உள்ள நீரில் விழுந்ததுள்ளது. அந்த பந்தை எடுக்க முயன்ற சிறுவர்கள் இருவரும் தவறி பள்ளத்தில் விழுந்துள்ளனர். இதில் நீரில் மூழ்கி இருவரும் பலியாகியதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுவர்களி நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.