கோவையில் மின்சாரம் தாக்கி அண்ணன் தங்கை பலி.. கிராம மக்கள் சோகம்!
கோவை உக்கடம் பகுதியில் மழையின் போது மின்சாரம் தாக்கி அண்ணன் தங்கை உயிரிழந்தனர்.
கோவை: உக்கடம் பகுதியில் மழையின் போது மின்சாரம் தாக்கிய அண்ணன் தங்கை ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பவரின் 18 வயது மகன் சல்மான். அவரது 16 மகள் பானு நேற்று பெய்த மழை காரணமாக சுலைமான் வீட்டில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை சல்மானும் அவரது தங்கை பானுவும் பாத்திரம் மூலம் வெளியேற்றியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த கம்பியை சல்மான் பிடித்துள்ளார். அதில் இருந்து அவர் மீது திடீரென் மின்சாரம் பாய்ந்தது.
இதனைக்கண்ட பானு அண்ணனைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.