ஊத்துக்குளியில் ஒரே டிராக்கில் 2 ரயில்கள்- எஞ்சின் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பயணிகள்
திருப்பூர்: ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற தண்டவாளத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அதை எஞ்சின் டிரைவர் கண்டுபிடித்து சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து ஈரோட்டுக்கும் இரு ரயில் தண்டவாளங்கள் தனித்தனியாக உள்ளன. இதில் ஒரு தண்டவாளத்தில் இருந்து மறு தண்டவாளத்திற்கு செல்லும் வசதி ரயில் நிலையங்களில் உள்ளன. அவ்வாறு இணைத்து பிரிக்கும்போதுதான் ரயில்களுக்கு சிக்னல் கிடைக்கும்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ரயில் நிலையத்திலும் இதேபோல் இரு தண்டவாளங்களையும் தானியங்கி முறையில் இணைத்து பிரிக்கும் வசதி உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் தானியங்கி சிக்னலை ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த நிலைய அதிகாரி முகேஷ்குமார் இயக்கினார். அப்போது, தானியங்கி சிக்னல்களை இயக்கும் மோட்டாருக்கு செல்லும் மின் இணைப்பில் பியூஸ் போனதாக தெரிகிறது.
இந்த நிலையில் கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூரை தாண்டி ஊத்துக்குளி ரயில்நிலையம் அருகே காலை 7.25 மணிக்கு வந்தது. அதே நேரம் ஹைதராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரிஎக்ஸ்பிரஸ் ரயில், ஈரோட்டில் இருந்து புறப்பட்டு ஊத்துக்குளி ரயில் நிலையம் அருகே வந்தது.
ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சிக்னல் கிடைக்காமல் இரு ரயில்களையும் அதன் டிரைவர்கள் தாங்கள் வந்த தனித்தனி தண்டவாளங்களில் ரயில் நிலையத்துக்கு வெளியே நிறுத்தி இருந்தனர்.
இதற்கிடையே தானியங்கி முறையில் சிக்னல் இயங்க முடியாமல் அனைத்து பகுதிகளிலும் சிவப்பு விளக்கு எரிந்தது. இதனால், தண்டவாள இணைப்பை மேனுவலாக மாற்றும்படி பணியில் இருந்த ரயில்வே ஊழியர் திலீப்குமாரிடம், ஊத்துக்குளி ரயில் நிலைய அதிகாரி முகேஷ்குமார் தெரிவித்துள்ளார.
இந்நிலையில் ஈரோடு நோக்கி செல்லும் தண்டவாளத்துக்கு செல்வதற்கு பதிலாக, சபரி எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும் தண்டவாளத்துக்கு செல்வதுபோல் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இருப்பதை எஞ்சின் டிரைவர் சிவசண்முகமுத்து பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு இன்டர்சிட்டி ரயிலை நிறுத்தினார்.
பின்னர் இதுகுறித்து நிலைய அதிகாரி முகேஷ்குமாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எஞ்சின் டிரைவர் தகவல் கொடுத்தார். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரு ரயில்களிலும் பயணம் செய்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இதனால் உயிர்தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications