அதிமுக பொதுச்செயலர் விரைவில் தேர்வு- போட்டி எதுவுமே இல்லை- பொன்னையன் 'பொளேர்'
அதிமுகவின் புதிய பொதுச்செயலர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார். பொதுச்செயலர் பதவிக்கு போட்டி எதுவும் இல்லை என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவர்; பொதுச்செயலர் பதவிக்கு போட்டி எதுவும் இல்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. தாமே பொதுச்செயலராக சசிகலா முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியதாவது:
அதிமுக பொதுச்செயலர் யார் என்பது குறித்து வதந்தி பரவுகிறது. அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.
ஜெயலலிதாவின் அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். அதிமுகவின் புதிய பொதுச்செயலர் விரைவில் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக அதிமுகவில் போட்டி எதுவும் இல்லை. அப்படியான செய்திகள் அனைத்துமே வதந்தி..
இவ்வாறு பொன்னையன் கூறினார்.












Click it and Unblock the Notifications