மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழக அரசு பின்பற்றாததே பருப்பு விலை உயர்வுக்கு காரணம்: தமிழிசை
சென்னை: மத்திய அரசு கொடுத்த ஆலோசனைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை. இதனால்தான் இங்கு பருப்பு விலை உயர்வு அதிகமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் சமத்துவ மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளர் நிரஞ்சன்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்.

அப்போது தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்து பணிகளையும் பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் பாஜகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இன்று முதல் பணிகளை தொடங்கியுள்ளனர். விரைவில் கட்சியின் தொகுதி மாநாடு நடத்தப்படும். இதில் பங்கேற்க முக்கிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். பீகார் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகத்தில் தான் பருப்பு விலை அதிகம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு முன் கூட்டியே அறிவித்தும் மாநில அரசு அந்த ஆலோசனைகளை சரியாக பின்பற்றவில்லை. அதனால் தான் தமிழகத்தில் பருப்பு விலை மிக அதிகம் உயர்ந்து விட்டது.
பருப்பு பதுக்கலை தடுக்குமாறு மத்திய அரசு முன்பே எச்சரித்தும் பதுக்கலை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது. ஒரு கிலோ துவரம் பருப்பை ரூ.110-க்கு தருவதாக தமிழக அரசு சொல்வது ஒரு கண் துடைப்பாகும். இந்தியா முழுவதும் மலிவு விலையில் பருப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உணவு பொருள் வாணிப கழகத்தில் இருந்து மத்திய அரசு உணவு பொருட்களை ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கிறது.
அந்த பொருட்களை உடனடியாக ரயிலில் இருந்து எடுத்துச் செல்லாததால் தமிழக அரசு தினமும் அதற்கு ரூ.1 கோடி வாடகையாக செலுத்தி வருகிறது. கடந்த மாதம் ரூ.30 கோடியை ரயில்வே துறைக்கு தமிழக அரசு வழங்கி இருக்கிறது.
பருப்பு தட்டுப்பாடு ஏற்படும் என மத்திய அரசு கடந்த 22-ந்தேதியே அனைத்து மாநிலத்திற்கும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications