சென்னை வந்தார் ஜவடேகர்... விஜயகாந்தை இன்று சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இடம்பெற்றுள்ளது. மற்ற சில கட்சிகளும் திமுக கூட்டணியில் விரைவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கூட்டணியினர் தற்போது இரண்டு கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு மார்ச் முதல் வாரத்தில் 3-ம் கட்ட பிரச்சாரத்தை துவக்க உள்ளனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைய துவக்கவில்லை.
தற்போதைய நிலையில் பாஜகவும் தங்கள் அணியில் இடம்பெறும் கட்சிகளை இன்னும் உறுதி செய்யவில்லை இந்நிலையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர் பின்னரே பாஜக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். பாஜக, அதிமுக கூட்டணி குறித்த யூகத்திற்கு தற்போது பதில் கூற முடியாது என்றார். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications