தேனியில் அமைகிறது நியூட்ரினோ திட்டம்... சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி!
தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Recommended Video

டெல்லி : தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் விஞ்ஞானக் காரணங்களை காட்டி இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சுற்றுச்சுழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை ஏற்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. திட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி. தண்ணீரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications