தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு: ஜல்லிக்கட்டை தொடர்ந்து பொங்கலிலும் கைவைப்பது சரியா?
பொங்கல் விடுமுறை அனைத்துப் பகுதிகளிலும் கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு, காவிரி விவகாரம், பாலாறு பிரச்சனை, மீனவர் விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் என்றாலே மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளது. காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவும் கர்நாடகத்தில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்து கொண்டு மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்தது.

அதேபோல் முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சனைகள் உள்பட அனைத்து நதிநீர் பிரச்சனைகளிலும் தமிழகத்துக்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மீனவர்கள் கைது நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களிலும் தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தின் போற்றி பாதுகாத்து வந்த ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. இதனால் 2015-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
கடநத் ஆண்டும் கடைசி நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது. மத்திய அரசு நினைத்திருந்தால் அப்போதே ஜல்லிகட்டு நடத்த அனுமதி அளித்திருக்க முடியும் ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இந்தாண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு அடியாக மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாட்கள் பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
மேலும் உயரதிகாரி விடுமுறை அளிக்க மறுத்தால் பணிக்கு கட்டாயம் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழர் பாரம்பரிய விளையாட்டு நசுக்கப்பட்ட நிலையில் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கும் ஆப்பு வைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டிருப்பது தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications