பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... அதிர்ச்சியில் தேவகோட்டை மக்கள் - வீடியோ
காஷ்மீர் கொடியை எரித்த பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவு செயலாளர் முத்துராமன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
தேவகோட்டை: தேவகோட்டையில் பாஜக பிரமுகர் வீட்டு மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசீனர். அவர் குண்டுவீச்சிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். போலீசார் குண்டு வீசிய நபர்களைத் தேடி வருகிறது.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் பாஜகவில் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாராக இருந்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி, பாகிஸ்தானின் தேசியக் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று அவர் வீட்டு படுக்கையறை ஜன்னலை நோக்கி மர்பநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அப்போது படுக்கையறையில் இருந்த முத்துராமன் மயிரிழையில் உயிர்தப்பினார்.
பாகிஸ்தான் கொடியை எரித்த காரணத்துக்காக அவர் மீது குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பாஜக இளைஞரணி தலைவர் ஜெகன் அரிவாளால் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications