கருணாநிதியின் மாஜி குமாஸ்தா நான்.... நிறைய தகவல்களை லீக் செய்வேன்... சொல்வது வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் குமாஸ்தாவாக இருந்தவன் நான்.. தேர்தல் நேரத்தில் பல தகவல்களை வெளியிடுவேன் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் 3-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று ஆவடியில் தொடங்கியது. அங்கு வைகோ பேசியதாவது:

Vaiko attack Karunanidhi

கருணாநிதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். ஒரு குற்றவாளி கூண்டில் ஜெயலலிதா நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கருணாநிதி எந்த கூண்டிலும் நிற்க மாட்டார்.

அதே நேரத்தில் கனிமொழி, தயாளு அம்மாள் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள். அண்ணா மறைவுக்கு பிறகு தமிழகம் நாசமாவதற்கு திமுக, அதிமுகவே காரணம். கருணாநிதிக்கு எதற்கு முதலமைச்சர் ஆசை.

1970ல் திருச்சியில் நடந்து பொதுக்கூட்டத்தில் 67 வயதான காமராஜர் ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார் என்றார் கருணாநிதி. இது எல்லாம் எனக்கு தெரியும். அவரிடம் நான் குமாஸ்தா வேலை பார்த்தேன். இதுபோன்று பல தகவல்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவேன்.

ஒபாமா போலவே ஒருவர் மாறி விட்டார். 67க்கு பிறகு 2016ல் அதிசயம் நடக்கப்போகிறது. மலைபோல் இருக்கிற ராட்சத கட்சிகளை வீழ்த்தி மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் இளைய தலைமுறையை நம்பித்தான் இருக்கிறோம்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+