ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணிதிரள்வோம்.. எதிர்பாளர்களுக்கு வைகோ அழைப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணி திரள்வோம் என எதிர்ப்பாளர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் ஆலை எதிர்பாளர்களுக்கு வைகோ அழைப்பு-வீடியோ
சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணி திரள்வோம் என எதிர்ப்பாளர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு, குடிநீர் மாசு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications