எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. நினைவிடம் இருக்கையில் கருணாநிதிக்கு மறுப்பா?-வைகோ
எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. நினைவிடம் இருக்கும் போது கருணாநிதிக்கு மட்டும் மறுப்பது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. நினைவிடம் இருக்கும் போது கருணாநிதிக்கு மட்டும் மறுப்பது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி உடல்நிலை குறைபாட்டால் இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா நினைவிடத்தில் இடம் வழங்க திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எனினும் தமிழக அரசோ மெரினாவில் இடம் வழங்கினால் அது சட்ட சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பதால் காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதை எதிர்த்து திமுக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகை தந்தார். அப்போது அவர் கூறுகையில் அண்ணா நினைவிடத்தில் இடம் தர மறுப்பது நியாயமற்றது.
அண்ணா நினைவிடத்தில் கருணாநிதிக்கு இடம் தர வேண்டும். கோடானு கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் கொண்டவர். அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டார்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ.நினைவிடம் இருக்கையில் கருணாநிதிக்கு இடம் தர மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications