புழல் சிறையில் இருந்து அமாவாசை நாளில் ரிலீஸ் ஆன வைகோ... அடுத்தது என்ன?
52 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு சென்னை புழல் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை நிறைந்த அமாவாசையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் வைகோ.
சென்னை: தேச துரோக வழக்கில் கைதாகி சிறை சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, 52 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு சென்னை புழல் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை முழு அமாவாசை நாளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரது அடுத்த திட்டம் அதிரடியாக இருக்கும் என்று மதிமுகவினர் கூறி வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பல ஆண்டுகளாக தேச துரோக வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இந்த வழக்கில் தானாக முன் வந்து ஆஜரான வைகோ, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

புழல் சிறையில் வைகோ
விரும்பினால் ஜாமீனில் செல்லலாம் என்று நீதிபதி கூறியும் அவர் செல்ல மறுத்துவிட்டார். புழல் சிறைக்குச் சென்ற வைகோவை, முன்னாள் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் திருமாவும் முத்தரசனும் சந்தித்து பேசினர். ஜாமீனில் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். நண்பர்களும் பிணையில் வாருங்கள் என்றனர்.

வைகோவிற்கு ஜாமீன்
3 முறை அவரை ஜாமினில் வெளியே செல்கிறீர்களா என்று நீதிபதி கேட்ட போதும் மறுத்த வைகோ, திடீரென ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நிறைந்த அமாவாசை
இன்று அமாவாசை நாளாகும். 53 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு வைகோ இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார். வாலண்டியராக சிறை சென்று இப்போது ஜாமீனில் ரிலீஸ் ஆகியுள்ளார். வைகோ. அவர் ஜாமீன் கேட்ட உடனேயே சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வலம் வர ஆரம்பித்து விட்டன.

அடுத்தது என்ன?
வைகோ சிறையில் இருந்த இந்த நேரத்தில்தான் மதிமுக உருவான நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளரே சிறையில் இருந்ததால் விழாவை விமரிசையாக கொண்டாடவில்லை. இந்த நிலையில் வைகோ இன்று புழல் சிறையில் இருந்து ஜாமீனில் ரிலீஸ் ஆகியுள்ளார்.

தொண்டர்கள் வரவேற்பு
ஜாமீனில் வைகோ ரிலீசானதை மதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இனிதான் எங்க தலைவரின் அதிரடியை பார்க்கப் போகிறது தமிழகம் என்று கூறி வருகின்றனர். வைகோவின் புதிய பாதை எப்படியிருக்குமோ பார்க்கலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications