புழல் சிறையில் இருந்து அமாவாசை நாளில் ரிலீஸ் ஆன வைகோ... அடுத்தது என்ன?
52 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு சென்னை புழல் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை நிறைந்த அமாவாசையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் வைகோ.
சென்னை: தேச துரோக வழக்கில் கைதாகி சிறை சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, 52 நாட்கள் சிறை வாசத்திற்குப் பிறகு சென்னை புழல் சிறையிலிருந்து இன்று வியாழக்கிழமை முழு அமாவாசை நாளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரது அடுத்த திட்டம் அதிரடியாக இருக்கும் என்று மதிமுகவினர் கூறி வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பல ஆண்டுகளாக தேச துரோக வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி இந்த வழக்கில் தானாக முன் வந்து ஆஜரான வைகோ, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

புழல் சிறையில் வைகோ
விரும்பினால் ஜாமீனில் செல்லலாம் என்று நீதிபதி கூறியும் அவர் செல்ல மறுத்துவிட்டார். புழல் சிறைக்குச் சென்ற வைகோவை, முன்னாள் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் திருமாவும் முத்தரசனும் சந்தித்து பேசினர். ஜாமீனில் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். நண்பர்களும் பிணையில் வாருங்கள் என்றனர்.

வைகோவிற்கு ஜாமீன்
3 முறை அவரை ஜாமினில் வெளியே செல்கிறீர்களா என்று நீதிபதி கேட்ட போதும் மறுத்த வைகோ, திடீரென ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நிறைந்த அமாவாசை
இன்று அமாவாசை நாளாகும். 53 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு வைகோ இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார். வாலண்டியராக சிறை சென்று இப்போது ஜாமீனில் ரிலீஸ் ஆகியுள்ளார். வைகோ. அவர் ஜாமீன் கேட்ட உடனேயே சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வலம் வர ஆரம்பித்து விட்டன.

அடுத்தது என்ன?
வைகோ சிறையில் இருந்த இந்த நேரத்தில்தான் மதிமுக உருவான நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளரே சிறையில் இருந்ததால் விழாவை விமரிசையாக கொண்டாடவில்லை. இந்த நிலையில் வைகோ இன்று புழல் சிறையில் இருந்து ஜாமீனில் ரிலீஸ் ஆகியுள்ளார்.

தொண்டர்கள் வரவேற்பு
ஜாமீனில் வைகோ ரிலீசானதை மதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இனிதான் எங்க தலைவரின் அதிரடியை பார்க்கப் போகிறது தமிழகம் என்று கூறி வருகின்றனர். வைகோவின் புதிய பாதை எப்படியிருக்குமோ பார்க்கலாம்.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications