தியாகுவுக்கு வைகோ நேரில் சென்று ஆதரவு
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி தியாகு நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு உண்ணாவிரத இடத்திற்கு நேரில் சென்ற வைகோ அங்கு தியாகுவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
வெற்றி அல்லது வீரச் சாவு என்ற முழக்கத்துடன் தியாகு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் போய்ப் பார்த்து ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு, தியாகு தனது போராட்டத்தை விலக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வைகோ நேரில் சென்று தியாகுவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்று முற்பகல் மீண்டும் அவர் தியாகுவைச் சந்திக்கிறார்.