நீந்திக் கடந்த நெருப்பாறு - நூல் வெளியீடு - வைகோ பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் அரவிந்த குமாரனின் "நீந்திக் கடந்த நெருப்பாறு" எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

உடன் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பைச்சேர்ந்த பாரி மைந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் முன்னணியினரும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications