20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் களத்தில் வைகோ!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு மீண்டும் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதிமுக முறை அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார்.
வைகோ முதல முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது 1996ல்தான். 1993ம் ஆண்டுதான் அவர் மதிமுகவைத் தொடங்கியிருந்தார். அடுத்த 3 வருடத்தில் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

விளாத்திகுளத்தில் முதல் தோல்வி
1996ல் நடந்த தேர்தலில் அவர் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெறும் 634 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.

1996ல் சிவகாசியில் தோல்வி
அதன் பின்னர் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தார். 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தைப் பிடித்தார்.

2 முறை வெற்றி
இதையடுத்து 1998 மற்றும் 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் அதே சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வைகோ.

2014ல் மீண்டும் தோல்வி
2014ம் ஆண்டு அவர் மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை அவர் விருதுநகரில் போட்டியிட்டார். இதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.

மீண்டும் தேர்தலில்
இந்த நிலையில் தற்போது மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு அவர் திரும்பியுள்ளார். கோவில்பட்டியில் அவர் களம் காண்கிறார். இதுவரை சட்டசபைக்குள் நுழைந்திராத வைகோவுக்கு கோவில்பட்டி வாசல் திறக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications