தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைப்பயணம்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ மதுரையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார்.
Recommended Video
மதுரை: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ மதுரையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார். இதனை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
மதிப்பீட்டுக்குழு பரிந்துரை
இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடக்கம்
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் இருந்து இன்று தொடங்கினார்.
ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இதனை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை 10 நாட்களுக்கு வைகோ நடைப்பயணம் மேற்கொள்கிறார்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். மதுரையில் நியூட்னோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றார்.