சசிபெருமாள் மரணத்தில் மர்மம்… ஹைகோர்ட்டில் வெளியிடுவேன்: வைகோ
கன்னியாகுமரி: சசிபெருமாள் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் சாகடிக்கப்பட்டுள்ளார். வரும் 31ம் தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி பகிரங்கமாக உண்மைகளை வெளியிடுவேன் என்று வைகோ கூறியுள்ளார்.
மார்த்தாண்டம் உண்ணாமலைக்கடையில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றகோரி கடந்த 31ம் தேதி 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது சசிபெருமாள் உயிரிழந்தார். சசிபெருமாள் மரணம் குறித்து கள ஆய்வு செய்வதற்காக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடைக்கு வந்தார். அங்கு சசிபெருமாள் மரணமடைய காரணமாக இருந்த டாஸ்மாக் கடை, சசிபெருமாளின் நண்பர் சிற்பி சசீதரன் வீடு, அருகில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், பள்ளிக்கூடம் போன்றவற்றை பார்வையிட்டார்.

டவர் அமைந்துள்ள இடம், போராட்டம் நடந்த இடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கும் சென்று விசாரித்தார். இதையடுத்து பேரூராட்சி தலைவர் ஜெயசீலன் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் சசிபெருமாள் மரணத்தின்போது நடந்தவைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி 1000 நாளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராட்டக் குழு அமைத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். சசிபெருமாளும் ஏற்கெனவே ஒரு முறை நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதேபோல், சம்பவம் நடந்த அன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சசிபெருமாள், அங்கிருந்து, உண்ணாமலைக்கடைக்கு வந்திருக்கிறார். பின்பு போராட்ட குழுவினரோடு கலந்துகொண்டு டவரில் ஏறி போராட்டம் நடத்தி இருக்கிறார்.
சசிபெருமாள் டவரில் ஏறியபோது அங்கு பணியில் இருந்த போலீசாரும், அதிகாரிகளும் அவரை ஏளனம் செய்து சிரித்துள்ளனர். இந்த அரசாங்கத்தால் சசிபெருமாள் சாகடிக்கப்பட்டுள்ளார்.

அப்போது அப்பாவி மக்களையும், காவல்துறை உதவி சூப்பிரெண்ட் விக்ரம் பட்டீல் அடித்து விரட்டியுள்ளார். பின்னர் குழித்துறை மருத்துவமனையிலும் தடியடி நடத்தியுள்ளார். அவருக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். இது வட இந்தியா இல்லை, தமிழ்நாடு. மக்களின் மனவோட்டத்தை புரிந்துக் கொள்ள வேண்டும்.
சசிபெருமாள் மரணம் அடைந்த செய்தி அறிந்த நான் உடனடியாக வந்து ஆசாரிபள்ளத்தில் சசிபெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன். அதை தொடர்ந்து அவரது அடக்கம் வரை எனது பணி தொடர்ந்தது. இப்போது அவரது மகன் விவேக் தொடர்ந்துள்ள வழக்கிலும் 31ம் தேதி நான் தான் ஆஜராகி வாதாடுகிறேன் அப்போது பகிரங்கமாக உண்மைகளை வெளியிடுவேன். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் தான் சசிபெருமாள் ஆத்மா சாந்தியடையும் என்றார் வைகோ.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications