கருணாநிதி வெளியேற்றிய சாஸ்திரியை துணைவேந்தராக நியமிப்பதா? மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதை..வைகோ வார்னிங்

தமிழ்நாடு வேட்டைக்காடா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவர் எச்சரித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதை..வைகோ வார்னிங்- வீடியோ

    சென்னை: மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்று தமிழக ஆளுநரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளர்.

    டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரியை நியமித்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.

    Vaiko warns TamilNadu governor Banwarilal Purohit

    இந்த நியமனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் வைகோ. இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, தமிழ்நாட்டில் ஆளுநராக புரோகிதர் ஒருவர் வந்து அமர்ந்திருப்பதாக கூறினார்.

    அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்திற்கு யாரை துணைவேந்தராக நியமனம் செய்வது? தமிழை நீச பாஷை என்று சொன்னவரையா? கருணாநிதியால் அன்றைக்கு வெளியேற்றப்பட்டவர் சூரியநாராயண சாஸ்திரி. ஆந்திராவைச் சேர்ந்தவரை தமிழ்நாட்டு சட்ட பல்கலைக்கழகத்திற்கு நியமித்தது ஏன்?

    டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் ஒருவரை தேர்வு செய்யாமல், விதிமுறைகளை மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கி செயல்படுகின்ற சூர்யநாராயண சாஸ்திரியை நியமனம் செய்தது ஏன்?

    தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா? மிஸ்டர் புரோகித்... மிஸ்டர் புரோகித்... ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்றும் வைகோ எச்சரித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+