17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம்- வைரமுத்து உருக்கம்
17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம் என்று வைரமுத்து தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: சென்னை அயனாவரம் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 17 பேரில் ஒருவனுக்குக் கூட மனசாட்சி இல்லை என்பது தேசிய சோகம் என்று வைரமுத்து தெரிவித்தார்.
சென்னை அயனாவரத்தில் 11 வயது கொண்ட சிறுமி செகரடேரியட் காலனியில் பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். இங்கு 300 வீடுகள் உள்ளன. 50 பேர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் லிப்ட் ஆபரேட்டர் ரவி (66) என்பவன் காது கேட்காத, வாய் பேசமுடியாத சிறுமியின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். இதையடுத்து அச்சிறுமிக்கு பிரசவத்துக்கு கொடுக்கும் மயக்க மருந்தை கொடுத்து மேலும் 16 பேரை வைத்து பலாத்காரம் செய்ய வைத்துள்ளான் ரவி.
ஒரு சிறுமிக்குப் பாதுகாப்பில்லை என்பதைவிட
— வைரமுத்து (@vairamuthu) July 21, 2018
17பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே என்பதுதான் தேசிய சோகம்.
இந்த சம்பவத்தில் 17 வெறி நாய்களும் கைது செய்யப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு சிறுமிக்குப் பாதுகாப்பில்லை என்பதைவிட 17 பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே என்பதுதான் தேசிய சோகம் என்று தெரிவித்துள்ளார்.