சிவகங்கை அருகே கார் கவிழ்ந்து விபத்து: ஒரு மாணவி பலி, 8 பேர் காயம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள பனங்கரை கிராமம். பள்ளி மாணவியர் 9 பேர், சூசையப்பர்பட்டினத்திலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளி வேன் வராத காரணத்தால் காரில் பள்ளிக்குச் சென்றனர்.
காரை கருணாகரன் என்பவர் ஓட்டி சென்றார். பனங்கரை, நடேசபுரம் பகுதியில் கார் வந்தபோது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. அதில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, தலைகுப்புற கவிழ்ந்து நெறுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த திவ்யா என்ற மாணவி சம்பவ இடத்திலே பலியானர். இவர் ப்ளஸ் 2 படித்து வருகிறார். காரை ஓட்டி வந்த டிரைவர் உட்பட மாணவியர் எட்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர். காரை டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை, சேலையூரில் உள்ள, சியோன் பள்ளியில், தொடக்க கல்வி படித்து வந்த மாணவி சுருதி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்து பலியானார். அப்போது தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சசிதரன், கல்வி நிறுவனங்கள், கட்டணம் பெற்றுக் கொண்டு தான், வாகனங்களை இயக்குகின்றன; தர்மத்துக்காக இயக்கவில்லை. இருந்தாலும், பழைய, ஓட்டை உடைசல் பஸ்களை, பராமரிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுகிறது.
இந்த வாகனங்களை எல்லாம், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார், அரிதாகவே சோதனை செய்கின்றனர். அதனால், பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதிகாரிகள், தங்கள் கடமையை உணர வேண்டும். அவ்வப்போது, பள்ளி வாகனங்களை பரிசோதித்து, விதிகளை பூர்த்தி செய்கின்றனரா என்பதை, போக்குவரத்து மற்றும் போலீஸ் துறைகள், உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை, ஆண்டுக்கு மூன்று முறை ஆய்வு செய்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சான்று வழங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில், பள்ளி, கல்லூரி வானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வு செய்தாலும் வாகனங்களை சரியாக பராமரிக்காத காரணத்தால் விபத்துகள் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது இன்றைய விபத்தும் இதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications