கரூரில் மணல் லாரி மோதி வி.ஏ.ஓ. பலி !
கரூர்: கரூர் அருகே கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் மணல் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ளது சிவாயம். இங்கு வசிக்கும் மாரிமுத்து என்பவரது மனைவி நதியா. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.
இவர் சிவாயத்தில் இருந்து அலுவலக வேலை காரணமாக, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா அலுவலகம் வந்தார். பின்பு, பணி முடிந்து தனது ஊரான சிவாயம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, குளித்தலையில் இருந்து கரூர் நோக்கி சென்ற மணல் லாரி ஒன்று , நதியா மீது மின்னல் வேகத்தில் மோதியது. இதில் வி.ஏ.ஓ. நதியா பலத்த காயம் அடைந்தார்.
உடனே, அருகில் உள்ள மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை கரூர் நகருக்கு முதல்வர் ஜெயலலிதா வரும் நிலையில் மணல் லாரி மோதி வி.ஏ.ஓ. ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் மணல் லாரி மூலம் மாதம் பல உயிர்கள் பலியாகி வருகின்ரது. ஆனால், இதில் பாராபட்சம் காட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமலே கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்துவிடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.