கிரானைட் முறைகேடு வழக்கு- தமிழக அரசுக்கு எதிராக பிறழ்சாட்சி சொன்ன வி.ஏ.ஓ சஸ்பெண்ட்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிரானைட் வழக்கில் அரசுக்கு எதிராக பிறழ்சாட்சி அளித்த கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர், கிடாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் மோசடி தொடர்பான வழக்குகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்த வழக்குகளுக்கு அரசு தரப்பு சாட்சியாக கிடாரிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அக்பர் சேக் சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேலூர் கோர்ட்டில் கிரானைட் வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பு சாட்சியான கிராம நிர்வாக அதிகாரி பிறழ்சாட்சியாக மாறினார்.
இந்நிலையில் பிறழ்சாட்சி அளித்தது குறித்து விசாரணை நடத்திய மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அதிகாரி அக்பர் சேக்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications