வர்தா புயலால் சென்னையில் 6,000 மரங்கள் சாய்ந்தன: வருவாய்த்துறை செயலாளர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வர்தா புயலால் சென்னையில் 6 ஆயிரம் மரங்கள் விழுந்துள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்து செல்லும்போது சென்னையை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுள்ளது.

சென்னையில் நேற்று மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இந்நிலையில் இது குறித்து வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன் கூறுகையில்,
வர்தா புயலால் சென்னையில் 6 ஆயிரம் மரங்கள் விழுந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. புயலால் விழுந்த மரங்கள் முதல்கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன.
மின்வினியோகத்தை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆவின் மூலம் பால் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications