திருச்சி: ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு - வி. சி. கட்சியினர் கைது!
திருச்சி: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உருவ படத்தை எரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனை கண்டித்து பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு இன்று காலை கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், செருப்பு மாலையுடன் கூடிய ராஜபக்சேவின் உருவம் தாங்கிய பேனர்கள் மற்றும் ராஜபக்சேவின் உருவ பொம்மையை சுமந்த பாடையுடன் மேளம் அடித்தபடி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது "ராஜபக்சே ஒழிக, அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே இப்போது இந்திய மீனவர்களை கொல்லதுடிக்கிறார்கள்" என கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன், "போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், கடந்த 45 வருடமாக இலங்கையில் தூக்குதண்டனை வழங்கப்படவில்லை.
ஆனால் இப்போது இந்திய தமிழக மீனவர்களுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததை போல் தமிழக மீனவர்களையும் கொல்லதுடிக்கிறது ராஜபக்சே அரசு. இந்த தண்டனையை எதிர்த்து மத்திய அரசு தலையிட்டு அப்பாவி தமிழர்களை மீட்கவேண்டும். செய்யத் தவறினால் போராட்டங்களை முன்னெடுப்போம் "என்றார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பிலிருந்த காவல்துறை டி.எஸ்.பி கணேசன் தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை பிடுங்கி எறிந்தனர்.
இதில் ஆவேசமடைந்த விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள், ராஜபக்சே பேனரை தீயிட்டு எரித்தனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 க்கும் மேற்பட்டவர்கள் போலீஸாரால் கைது செயப்பட்டனர்
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications