விபத்தில் சிக்கிய மூதாட்டிகள்... உயிரை காத்த வேடசந்தூர் எம்.எல்.ஏ டாக்டர் பரமசிவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இரண்டு மூதாட்டிகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார் வேடசந்தூர் எம்.எல்.ஏ விபிபி பரமசிவம்.

வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் கார் மோதி அன்னமுத்து, ஆரோக்கியம்மாள் ஆகிய இரு மூதாட்டிகள் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அப்போது அவ்வழியே வந்த வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் திரு வி.பி.பி.பரமசிவம் காயம்பட்டு உயிருக்கு போராடியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்சு மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

அரசு மருத்துவமனையில் மூதாட்டிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்சமயம் அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.எல்.ஏவின் மனிதநேயம் மிக்க செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications