For Daily Alerts
Just In
தமிழகத்துக்கு ரயில்வே அமைச்சகம்: போராடிய வாஞ்சி இயக்கத்தலைவர் கைது.
செங்கோட்டை: தமிழகத்திற்கு ரயில்வே மத்திய அமைச்சர் பதவி வழங்க கோரி தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த வாஞ்சி இயக்கத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 வது மக்களவைத்தேர்தலில் கன்னியாக்குமரி தொகுதியில் பாஜக மாநிலத்தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றிப்பெற்றார். பாமகவைச் சேர்ந்த அன்புமணியும் வெற்றிப்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் பாஜக.அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை அமைக்கிறது. மோடி தலைமையிலான அமைச்சரவையில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ரயில்வே மத்திய அமைச்சர் பதவி வழங்க கோரி செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதன் சிலைமுன்பு தடையை மீறி வாஞ்சிஇயக்கத்தின் நிறுவனத் தலைவர் ராமநாதன் இன்று உண்ணாவிரதம் தொடங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் வந்து வீர வாஞ்சிநாதன் சிலை முன்பு அமர்ந்திருந்த ராமநாதனை கைது செய்தனர்.
Comments
English summary
Police arrested Veera Vanchinathan Iayakkam founder Ramanathan, he was staged hunger strike demanding railway minister post to BJP state leader Pon Radhakrishnan in Modi cabinet.
Story first published: Tuesday, May 20, 2014, 13:09 [IST]