தலித் மக்களை இழிவுபடுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம்- கி.வீரமணி வரவேற்பு
சென்னை: தாழ்த்தப்பட்ட இன மக்களை இழிவுபடுத்தினால், கடுமையான தண்டனை விதிக்கும் வகையிலான சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. இந்தத் தொடரில் பல முக்கிய மசோதாக்களை விவாதித்து நிறைவேற்ற முடியவில்லை. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு கடுமையான தண்டனை தரும் வகையில் பழைய சட்டத்தைத் திருத்த வேண்டிய மசோதாவும் நிறைவேறாத நிலையில் இருந்தது. பிறகு, மாநிலங்களவையில் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது போன்ற கடுமையான சட்டங்களை நிறைவேற்றினால் மட்டும் போதாது. அந்தச் சட்டத்தைச் செயல்படுத்தி மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த மசோதா நிறைவேற காரணமாக இருந்த ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள் என்று வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications