20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலைக்குக் கண்டனம்... வேலூரில் கைதி உண்ணாவிரதம்!
Subscribe to Oneindia Tamil
வேலூர்: தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வேலூர் சிறையில் கைதி உண்ணாவிரதம் இருந்து வரும் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்தவர் கண்ணபிரான். இவர் கொலை வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர், ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் நீதி விசாரணை தேவை எனவும், இந்த பிரச்னை தீர்க்கப்படும் வரை உண்ணாவிரதம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார்.
தான் உண்ணாவிரதம் இருப்பது குறித்த கடிதத்தை ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் கண்ணபிரான் வழங்கி உள்ளார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications