எங்க அப்பா அம்மா விவசாயிகள்.. இதை விட வேற என்ன வேணும்.. விஜயகாந்த் கேள்வி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: எனது அப்பா, அம்மா விவசாயிகள். நான் முதல்வராக இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.

Vijayakanth questions the qualifications of Jaya and Karunanidhi to be CM

தஞ்சையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசினார் விஜயகாந்த். அவரது பேச்சிலிருந்து...

  • 6 கட்சிகளை கொண்ட எங்கள் கூட்டணிக்கு என்றும் ஏறுமுகம் தான்.
  • முதல்வராக விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
  • நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது அப்பா, அம்மா கிராமத்தில் பிறந்தவர்கள்.
  • முதல்வராக இதை விட என்ன தகுதி வேண்டும்.
  • ஜெயலலிதா, கருணாநிதியிடம் கொள்ளையடிக்க, ஊழல் செய்ய தகுதி இருக்கிறது. அது என்னிடம் இல்லை.
  • விஜயகாந்த் செல்லும் இடங்களில் எல்லாம் யாரையாவது அடிக்கிறார் என்று கூறுகிறார்கள்.
  • தவறு எங்கு நடந்தாலும் தண்டிக்க தயங்கமாட்டேன். எனக்கு நடிக்க தெரியாது.
  • எனக்கு மானசீக குரு எம்.ஜி.ஆர். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார்.
  • அதேபோல் தான் நாங்களும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம்.
  • நான் யாரிடமும் 5 காசு கூட வாங்காமல் சீட் கொடுத்து இருக்கிறேன்.
  • எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அப்பழுக்கற்றவர்கள்.
  • நாட்டை கொள்ளையடித்து கொண்டு இருந்தவர்களை இதுவரை யாரும் தட்டி கேட்கவில்லை.
  • தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நல கூட்டணிக்கு 130 முதல் 155 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 120 இடங்கள் வந்தாலும் நாம் வெற்றி பெறுவோம்.
  • இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர்.
  • இதில் தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் நாங்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அதர்மத்தை சேர்ந்தவர்கள்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+