மீண்டும் சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் பயணம்!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்காக நேற்று இரவு சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
லோக்சபா தேர்தல் முடிவுக்குப்பிறகு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சித் தொண்டர்களை சந்தித்து கருத்து கேட்டார். உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதனால் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ந் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.

நெஞ்சு எரிச்சல்
நெஞ்சு எரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு அவர் வீடு திரும்பினார்.

மீண்டும் சிங்கப்பூர்
இந் நிலையில் விஜயகாந்த் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி பிரேமலதா மட்டும் சென்றார்.

ரகசிய பயணம்?
விஜயகாந்தின் சிங்கப்பூர் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்திற்கு தொண்டர்கள் யாரும் வரவில்லை. அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக கூறப்படுகிறது.

கண் பிரச்சனை
ஏற்கனவே டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சியில் தடுமாறி கீழே விழப் போன போதே தமக்கு கண் பிரச்சனை இருப்பதாக கூறியிருந்தார். அதேபோல் மோடி பிரதமராக பதவியேற்ற போதும் விஜயகாந்துக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்ததால் நிகழ்ச்சிக்கே போகவில்லை என்றும் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் சிகிச்சை
அதனால் சிங்கப்பூர் சென்று விஜயகாந்த் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அவருக்கு கல்லீரல் பிரச்சனை..அதனால் சிகிச்சை பெற்றார் என்று செய்திகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications