சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்
சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அனுமதிபெற்ற பின்னர் தான் புதிதாக கட்டிடம் கட்டப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் கட்டிடம் கட்டுபவர்களுக்கு துணையாக மின்வாரியம், மின்சார இணைப்பை கொடுத்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண மக்கள் கட்டுகின்ற வீடுகளுக்கு மின் இணைப்பு தரவேண்டும் என்று கேட்டால், பல காரணங்களை சொல்லி மின் இணைப்பை தரமறுக்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களுக்கு, மின் இணைப்புக்கு முறையான ஆவணம் செலுத்தாமல், இலஞ்சம் பெற்றுகொண்டு மின் இணைப்பு வழங்கப்படுவதாக அங்குள்ள மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
வாகனங்கள் சென்றுவர சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்வது போக்குவரத்திற்கு இடையூராக இருக்கிறது. தமிழக அரசும், மாநகராட்சியும் இதில் தலையிட்டு சாலையோரங்களில் உள்ள முறையற்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவேண்டும். இதேபோல் விதியை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications