சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்
சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அனுமதிபெற்ற பின்னர் தான் புதிதாக கட்டிடம் கட்டப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் கட்டிடம் கட்டுபவர்களுக்கு துணையாக மின்வாரியம், மின்சார இணைப்பை கொடுத்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண மக்கள் கட்டுகின்ற வீடுகளுக்கு மின் இணைப்பு தரவேண்டும் என்று கேட்டால், பல காரணங்களை சொல்லி மின் இணைப்பை தரமறுக்கிறார்கள். ஆனால் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களுக்கு, மின் இணைப்புக்கு முறையான ஆவணம் செலுத்தாமல், இலஞ்சம் பெற்றுகொண்டு மின் இணைப்பு வழங்கப்படுவதாக அங்குள்ள மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
வாகனங்கள் சென்றுவர சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்வது போக்குவரத்திற்கு இடையூராக இருக்கிறது. தமிழக அரசும், மாநகராட்சியும் இதில் தலையிட்டு சாலையோரங்களில் உள்ள முறையற்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவேண்டும். இதேபோல் விதியை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications