டெங்கு: அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தேவையில்லை... ரூ10 லட்சம் நிதி உதவி தேவை: விஜயகாந்த்
டெங்குவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: டெங்குவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
எனினும் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். டெங்குவுக்கு குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர்.

நோயாளிகளுடன் சந்திப்பு
ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார். அதுபோல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்திக்க தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்றார்.

டெங்கு விவகாரம்
அப்போது நோயாளிகளை விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், டெங்கு விவகாரத்தை பெரிதாக்காமல் மக்களை காப்பாற்ற வேண்டும்.

ரூ.10 லட்சம் நிதியுதவி
டெங்கு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தேவை இல்லை.
டெங்குவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை குழு
டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுவையில் மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.












Click it and Unblock the Notifications