அப்போலோவிற்கு இன்று படையெடுத்த வி.ஐ.பிக்கள்… கே.ஆர். ராமசாமி, நடிகர் கார்த்திக், தாணு
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்றும் விஜபிக்கள் அப்போலோவிற்கு படை எடுத்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 22 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாதாரணமாக காய்ச்சல், நீர்சத்து குறைவு என்று சிகிச்சையளித்து வந்த அப்போலோ மருத்துவமனை நாளடைவில் நுரையீரல் தொற்று இருப்பதாக அறிவித்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா.
இந்நிலையில், ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சியின் தலைவர்கள், பிரமுகர் என பல்வேறு தரப்பினரும் அப்போலோ மருத்துவனைக்கு சென்று அங்குள்ள அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கே.ஆர். ராமசாமி
காங்கிரஸ் சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி அப்போலோ மருத்துவமனைக்கு இன்று சென்றார். பின்னர், முதல்வர் விரைந்து குணமடைந்து பணியை தொடர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக அப்போலோ மருத்துவரிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், மருத்துவர்களிடம் அவர் பேசியதாகவும், விரைவில் ஜெயலலிதா குணம் பெற்று வழக்கம் போல் பணிக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தார். மேலும் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் வதந்திகளை நம்ம வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
திரைப்படத் தயாரிப்பாளர் தாணு
அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அதிமுக தலைவர்களை சந்தித்து பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அனைவரின் வேண்டுதல்படி விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இவரைப் போன்றே திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் அப்போலோவிற்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து இன்று விசாரித்தார்.