நெல்லையில் அதி வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்.. பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை அருகே உள்ள கிராமங்களில் புது விதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
நெல்லை அருகே உள்ளது கீழநத்தம் கிராமம். இ்ங்கு தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துளளனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டு டெங்குவை பரப்பும் கொசுவை கொல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
கீழநத்தம் கிராமத்தில் குழந்தைகள் உள்பட 6 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர்கள் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலருக்கு அடுத்தடுத்த காய்ச்சல் ஏற்பட்டது. நெல்லை சித்த மருத்துவ கல்லூரி, மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றோம்.
ஒரு சிலருக்கு காயச்ச்சல் குணமடைந்துள்ளது. இப்பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிககை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலும் சுகாதார பணியாளர்கள் அங்கு குவிந்து பணிகளை போர்க்கால வேகத்தில தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications