பெண் எஸ்பியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஐஜி.. விசாரணையை தொடங்குகிறது விசாகா கமிட்டி!
காவல்துறை ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை: காவல்துறை ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக காவல் துறையில், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தனது துறையைச் சேர்ந்த ஐ.ஜி மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தமிழக காவல்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு அந்த பெண் எஸ்பி புகார் கடிதத்தையும் அனுப்பினார். அதில் தான் பணியில் சேர்ந்தது முதலே ஐ.ஜி தன்னிடம் தவறான நோக்கத்திலேயே நடந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

மிரட்டி கட்டிப்பிடித்தார்
சில சமயங்களில் ஆலோசனை என அழைத்து அவருடைய அறையில் வைத்து தன்னை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த பெண் எஸ்பி தனது புகாரில் தெரிவித்திருந்தார். பலமுறை தவிர்த்தும் தன்னை மிரட்டி தனக்கு ஐஜி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் கூறியிருந்தார்.

கட்டிப்பிடித்து முத்தம்
வேலை நேரத்தில் தனக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது என ஐஜியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பெண் எஸ்பி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி அவருடைய அறையில் ஐஜி தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார் பெண் எஸ்பி.

நாசமாக்கிவிடுவேன்
இது குறித்து வெளியில் கூறினாலோ அல்லது புகார் அளித்தாலோ ஆண்டுதோறும் வழங்கப்படும் நன்னடத்தை அறிக்கையில் மோசமான வார்த்தைகளை சேர்த்து எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவேன் என அந்த அதிகாரி மிரட்டியதாகவும் பெண் எஸ்.பி தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

விசாரணை குழு
இந்த புகார் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் குழு அமைத்து, தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

விசாகா கமிட்டி
இந்தக் குழுவில் கூடுதல் டி.ஜி.பி சு.அருணாசலம், டி.ஐ.ஜி தேன்மொழி, டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணியாற்றும் ரமேஷ், ஓய்வு பெற்ற எஸ்.பி சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெண் எஸ்.பி-ன் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications